இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் மீட்பு!(Photo)
இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வரப்பட்ட கடல் அட்டைகள் நேற்று(2) மாலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்கு கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற காரை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது கடத்தி செல்ல ஆயத்தமாக இருந்த 21 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர்.


பொலிஸார் விசாரணை
இது தொடர்பாக தேவிபட்டினத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கடல் அட்டைகள் பிடித்து வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள வனத்துறையினரிடம் குறித்த கடல் அட்டைகளை ஒப்படைக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan