இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் மீட்பு!(Photo)
இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வரப்பட்ட கடல் அட்டைகள் நேற்று(2) மாலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்கு கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற காரை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது கடத்தி செல்ல ஆயத்தமாக இருந்த 21 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர்.


பொலிஸார் விசாரணை
இது தொடர்பாக தேவிபட்டினத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கடல் அட்டைகள் பிடித்து வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள வனத்துறையினரிடம் குறித்த கடல் அட்டைகளை ஒப்படைக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
வெளிநாட்டில் மூன்று நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri