இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் மீட்பு!(Photo)
இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வரப்பட்ட கடல் அட்டைகள் நேற்று(2) மாலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்கு கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற காரை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது கடத்தி செல்ல ஆயத்தமாக இருந்த 21 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர்.


பொலிஸார் விசாரணை
இது தொடர்பாக தேவிபட்டினத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கடல் அட்டைகள் பிடித்து வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள வனத்துறையினரிடம் குறித்த கடல் அட்டைகளை ஒப்படைக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam