இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் மீட்பு!(Photo)
இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வரப்பட்ட கடல் அட்டைகள் நேற்று(2) மாலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்கு கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற காரை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது கடத்தி செல்ல ஆயத்தமாக இருந்த 21 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர்.


பொலிஸார் விசாரணை
இது தொடர்பாக தேவிபட்டினத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கடல் அட்டைகள் பிடித்து வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள வனத்துறையினரிடம் குறித்த கடல் அட்டைகளை ஒப்படைக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 14 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam