கடலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பொருட்கள் மீட்பு
கடலில் மீன்பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட சுருக்குவலை உள்ளிட்ட சில பொருட்களை புதன்கிழமை கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைத்த தகவலையடுத்து புதுக்குடியிருப்பு கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது கடலில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடிப்பதற்கு கடலில் பதுக்கி வைத்திருந்த 2 சுருக்குவலைகள், ஒரு எஞ்சின், ஒரு வோர்ட், டோச் லைட், வெற்றி, உள்ளிட்ட சுமார் 15 லட்சம் ரூபா மதிப்பீட்டிலான பொருட்கள் என்பன தேத்தாதீவு, மற்றும் களுதாவளைக் கடற்பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் யாவும் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஒப்படைப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தெரிவித்துள்ளார்.





IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
