கைகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்! - பொலிஸார் வெளியிட்ட தகவல்
அண்மையில் கைகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணாலை பகுதி களனி கங்கையில் கடந்த 26ம் திகதி சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது. இந்த சடலமான ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட மாந்திரீகர், கைது செய்யப்பட்ட பெண்ணுடன் தகாத தொடர்புகளை பேணி வந்துள்ளதுடன் , அவர்கள் இருவரும் ஹங்வெல்ல - எம்புல்கம பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.
இதன்போது கடந்த 23ம் திகதி புதன்கிழமை இருவர் மாந்திரீகரை கடத்திச் சென்றுள்ளதாக சந்தேக நபரான பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
எனினும் குறித்த பெண்ணுக்கும் எல்புல்கம பகுதியில் சாரதியாக தொழில்புரிந்துவரும் நபரொருவருக்கும் இடையில் காணப்பட்ட மற்றுமொரு தகாத தொடர்பு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சாரதி, பனுவஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரென அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றைய நபர் ஹோமாகம -பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் பிரதான சந்தேக நபரின் உறவினர் என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் கொலைச் செய்வதற்காக பயன்படுத்திய சுத்தியல் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
