தமிழரசுக் கட்சியில் குழப்ப நிலை ஏற்பட காரணம்: வன்னி மாவட்ட வேட்பாளர் விளக்கம்
சில தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாகவே தமிழரசுக் கட்சியில் குழப்ப நிலை காணப்படுவதாக அக்கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று புதன்கிழமை (16) மதியம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இடம்பெறுகின்ற தேர்தல்களில் இளைஞர்கள் போட்டியிட வேண்டும், மாற்றம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என அனைவரும் கூறுகின்றீர்கள்.
அரசியலில் இளைஞர்கள்
வன்னி தேர்தல் தொகுதியில் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்ற போது, பல மாற்றங்கள் தென்படுகின்றன. தென்பகுதி மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பிய பின்னர் எமது பிரதேச மக்களிடமும் மாற்றம் ஒன்று வேண்டும்.

இளைஞர்கள் அரசியலில் குதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 16 மணி நேரம் முன்
அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் நான்காவது நடிகை.. 8 ஆண்டுகளுக்கு பின் நடிக்க வருகிறார்? Cineulagam