அநுரவுக்கு கை கொடுக்க தயார்..! சிறீதரன் தெரிவிப்பு
அநுர அரசு நியாயமான ஊழலுக்கு எதிரான அரசு போதைவஸ்துக்களை கண்டுபிடிக்கின்றது நல்ல விடயங்களுக்கு நாங்களும் கை கொடுக்க தயாராக இருக்கின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பாரதிபுரம் சூசை பிள்ளை கடைச் சந்தியில் நடைபெற்ற போரின் போது உயிரிழந்த முதற்பண் மாவீரர் மாலதியினுடைய 38வது ஆண்டு நினைவு வழக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை
தொடர்ந்து உரையாற்றும் போது, சர்வதேச அரங்கிலே பேசப்படுகின்ற ஒரு இனமாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அநுர அரசு ஒரு நியாயமான ஊழலுக்கு எதிரான அரசு என்பதோடு போதைவஸ்துக்களை கண்டுபிடிக்கின்றது.
நல்ல விடயங்களுக்கு நாங்களும் கைகொடுக்க தயாராக இருக்கின்றோம். ஆனாலும் தைரியமுள்ள அரசாக இருந்தால் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மேற்கொண்டு நிரூபிக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்