பெங்களுரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
றோயல் சலன்ஜர்ஸ் பெங்களுரு அணி இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான தகுதிகாண் (Qualifier 1) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய றோயல் செலன்ஜர்ஸ் அணி வெற்றியீட் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
இதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மட்டும் பெற்றுக்கொண்டது.
இதில் மார்கஸ் ஸ்டோனிஸ் 26 ஓட்டங்களையும், பிரபாசிம்ரன் மற்றும் அஸ்மதுல்ல ஒஸ்மாரி ஆகியோர் தலா 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் பெங்களுரு அணி சார்பில் ஜோஸ் ஹசல்வுட் மற்றும் சுயேஸ் சர்மா ஆகியோர் அபாரமாக பந்து வீசி தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர்.
றோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு அணி
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு அணி 10 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்து, போட்டியில் எட்டு விக்கெட்களினால் வெற்றியீட்டியது.
இதில் பில் சால்ட் ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் மயன்க் அகர்வால் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக அபாரமாக பந்து வீசி 17 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய சுயேஸ் சர்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களுரு அணி நான்காவது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளது, இதற்கு முன்னர் மூன்று தடவைகளிலும் பெங்களுரு அணயினால் சாம்பியன் பட்டம் வென்றெடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 2 மணி நேரம் முன்

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல் Cineulagam

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam
