இலங்கையில் பரவும் மற்றுமொரு நோய் தொற்று
இலங்கையில் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோய் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சிக்கன்குன்யா உட்பட்ட நோய்களின் தாக்கம் நாட்டை பாதித்துள்ள நிலையில், எலிக்காய்ச்சல் தொடர்பான செய்தியும் வெளியாகியுள்ளது.
எலிக்காய்ச்சலை காவும் பக்டீரியா, நீர் அல்லது விலங்குகளின் சிறுநீரால் மண் மாசுபடும்போது, தோல் வெடிப்புக்கள் அல்லது வேறு வழிகளில் மனித உடலுக்குள் நுழைவதாக தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் துசானி தாப்ரே தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள்
இந்த நோயினால் அதிகமாக இரத்தினபுரி, குருநாகல், கேகாலை மற்றும் களுத்துறை பகுதிகளே பாதிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரையிலும், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் இந்த நோய் தொற்று பொதுவாக அதிகரிக்கும் என்று துசானி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அதிக காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது என்றும், நோயைத் தடுக்க உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical Illusion:'325' மற்றும் '235' என்ற இலக்கங்களுக்கிடையில் இருக்கும் வித்தியாச எண் என்ன? Manithan

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam
