தேர்தலுக்கான நிதி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல என்றும் நிதி ஒதுக்குவதற்கு நிதியமைச்சு தயாராக உள்ளது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
யட்டியந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவின மதிப்பீடு இன்னும் 10 கோடி ரூபாயை தாண்டவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஏற்பாடுகள்
10 பில்லியன் வரம்பு, சில வேளைகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கை வாக்குச் சீட்டுக்கு அதிகமாக இருந்தால், அதிகரிக்கப்படலாம்.
அந்த வகையில், ஒரு வேட்பாளருக்கு சுமார் 100 மில்லியன் ருபாய் கூடுதல் செலவாகும்.
இருப்பினும், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அதிகாரிகளின் கொடுப்பனவுகள்
தேர்தலுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகமும் குறிப்பிட்டுள்ளது.
ஆணையகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்குப் பின்னர் இன்னும் பணம் மீதம் உள்ளது.
அத்துடன் அச்சிடுதல், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளைத் தவிர, அதிகாரிகளின் கொடுப்பனவுகள் போன்ற சில செலவுகள் எஞ்சியுள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
