நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கக்கூடியவர் ரணிலே: நாமல்
மொட்டிலிருந்து ஒருவரை நியமிக்கும் உரிமை எங்களுக்கு இல்லை, அதனால்தான் நாம் ரணில் விக்ரமசிங்கவைத் தெரிவு செய்தோம், எங்களுக்கு அப்போது இருந்த மாற்று வழி அது ஒன்றுதான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உரிய திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால் அதிக சபைகளைக் கைப்பற்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும் வெற்றியை அடையும்.
ரணில் விக்ரமசிங்கவை நாம் ஏன் ஜனாதிபதியாக நியமித்தோம் என்று பலரும் கேள்விகளை எழுப்புகின்றார்கள்.
ஜனாதிபதி தேர்வு
மக்கள் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள பிரதமரை வேண்டாம் என்றார்கள். அதனால் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகினார்.
69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியை வேண்டாம் என்று மக்கள் வலியுறுத்தினார்கள்.
பொருளாதாரப் பிரச்சினை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளையும் எரித்தார்கள். மொட்டுக் கட்சியில் இருந்து ஜனாதிபதி வேண்டாம் என்பதுதானே இதன் அர்த்தம்.
மேலும், அவர் ஒரு திறமைசாலி, அனுபவசாலி, இந்தப் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்கக்கூடியவரும் அவரே. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்கினோம் என தெரிவித்துள்ளார்

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
