கடும் கோபத்தில் ரணில் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை
அரசாங்கம் தொடர்வதற்கு ஆதரவளிக்காவிடில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டதாக பொதுஜன பெரமுன கட்சி தலைமைக்கு, ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மக்களின் பணத்தை வீணடிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை மாற்றம்
இதன்போது மேற்கொள்ளப்பட்ட அமைச்சு மாற்றத்தில் உள்ளடங்களின் மாற்றமே தவிர புதிய பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அமைச்சுப் பதவிகளை வழங்கி மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்க தயாரில்லை என அவர் பொதுஜன பெரமுன கட்சியிடம் தெரிவித்துள்ளார்.

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
