ரணிலின் முயற்சியை தோற்கடிப்பதற்காகவே மகிந்தவை ஜனாதிபதியாக்கினோம்: ஜே.வி.பி
"ரணில் விக்ரமசிங்க, விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரிப்பதற்குத் தயாரானபோது அதைத் தோற்கடிப்பதற்காகவே நாம் மகிந்தவை அன்று ஜனாதிபதியாக்கினோம்" என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "மகிந்த ராஜபக்சவை 2005ஆம் ஆண்டில் நாம் ஜனாதிபதியாக்கியதும் அவர் பின்னர் திருடியதும் ஒரே விடயம் அல்ல. வேறு வேறு விடயம். நாம் மகிந்தவை ஜனாதிபதியாக்கியது திருடுவதற்கு என்றால் அதை நாம் பாரமேற்போம்.
ரணில் விக்ரமசிங்க விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரிப்பதற்குத் தயாரான போது அதைத் தோற்கடிப்பதற்காகவே நாம் மகிந்தவை அன்று ஜனாதிபதியாக்கினோம்.
ஊழல் - மோசடிகள்
ஆனால், மகிந்த ஆட்சிக்கு வந்ததும் திருட ஆரம்பித்துவிட்டார். அதற்கு எதிராகவும் நாம் போராடினோம். பின்னர் அவரைத் தோற்கடிப்பதற்காகக் களமிறங்கினோம்.
1977ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளும் ஊழல், மோசடிகளைச் செய்தே உள்ளன.
ஆனால், ஜே.வி.பி. ஆட்சிக்கு இந்த ஊழல், மோசடிகளுக்கு உடன்
முற்றுப்புள்ளி வைத்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலும் தமிழ் அரசியலுக்கு தேவையான கூட்டு முன்னணித் தத்துவமும் 30 நிமிடங்கள் முன்

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
