மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம்! சன்ன ஜயசுமன வெளியிட்டுள்ள தகவல் (video)
இலங்கையின் பிரதமராக மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இன்று (25.02.2023) நடந்த ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என தாம் நினைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த முயற்சியை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.