ரணிலிடம் சிஐடியினர் முக்கிய விசாரணை : திட்டமிட்டு பரப்பப்படும் தகவல்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கைது செய்யப்படலாம் என்று போலிப் பிரசாரம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதவியில் இருந்தபோது அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்தி லண்டனுக்கு பயணம் மேற்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ரணில் கைது செய்யப்படுவாரா..
இதன்படி, சற்று முன்னர் அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு விசாரணையின் நிமித்தம் வருகைத் தந்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் அளித்த பிறகு, கொழும்பின் உள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவும் அவர் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர் சந்திப்பிற்குப் பிறகு, அவர் நேபாளம் மற்றும் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அரசாங்க ஆதரவு யூடியூப் தள உரிமையாளர் ஒருவர், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதற்கு வேறு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை எனவும் இது தனது யூடியூப் சேனலில் பார்வைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் டிக்டாக் மூலம் மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் என்பதைத் தவிர வேறு எந்த அடிப்படையும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam