ரணிலின் ஏமாற்று நாடகம் அரங்கேற்றம்:பொன்சேகா ஆதங்கம்-செய்திகளின் தொகுப்பு
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தமையால்தான் தடைப்பட்டியலில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், அடையாளம் காணப்பட்ட தனிநபர்களும் சேர்க்கப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனினும் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தாமல், சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவும், ஜெனிவா மாநாட்டை சமாளிக்கவுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தடை நீக்கம் என்ற இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அவரின் இந்த ஏமாற்று நாடகத்துக்கு சர்வதேசமும் பலியாகப் போகின்றது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரை ஏமாற்றி பிரதமர் பதவியை சுவீகரித்து பின்னர் ஜனாதிபதியாகிய ரணில், முழு நாடாளுமன்றத்தையும் ஏமாற்றி, நாட்டு மக்களையும் முட்டாளாக்கி இன்று சர்வதேசத்தையும் முட்டாளாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,