பொது வேட்பாளரை அறிவித்த ஐக்கிய தேசிய கட்சி
ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் முதலாவது கூட்டம் குளியாப்பிட்டியவில் இடம்பெற்றது. இந்த கூட்டத்திலேயே பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பொது முன்னணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி விக்ரமசிங்க நிச்சயமாக நிறுத்தப்படுவார் என தெரிவித்தார்.
கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு
இதேவேளை ஜனாதிபதி விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.
நெருக்கடி காலத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தவறியதற்கு வேறு எந்தக் கட்சித் தலைவர்களையும் குற்றம் சொல்லப் போவதில்லை என்றும் அவர்களால் செயல்பட முடியவில்லை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தலைவர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, பிரதித் தலைவர் ருவ்வான் விஜேவர்தன, உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
