ரணில் கொடுத்த உத்தரவு! அடுத்த நாளே மாறிய நிலைமை - அவரே வெளிப்படுத்தியுள்ள தகவல் (Photos)

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe President of Sri lanka
By Mayuri Aug 09, 2022 09:57 AM GMT
Report

நாடாளுமன்றத்தை வன்முறையில் இருந்து பாதுகாத்து ஜனநாயகத்தை பாதுகாத்த இராணுவ வீரர்கள் தேசத்தால் கெளரவிக்கப்படுகிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை நசுக்கி, ஜனநாயகத்தை பாதுகாத்து, சட்ட சபையை முடக்கிய வன்முறையாளர்களை ஒடுக்கிய இராணுவத்தினருக்கு தேசத்தின் புகழுரை உரித்தாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெலவத்த, அக்குரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று முற்பகல் விசேட உத்தியோகபூர்வ விஜயத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இராணுவத்தினரை சந்தித்து உரையாற்றும் போதே குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

பரபரப்பாகும் கொழும்பு - திடீரென இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி ரணில் 

மேலும் தெரிவிக்கையில், வன்முறையாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து சபையை முடக்கியிருந்தால் நாடு ஆட்சியை இழந்திருக்கும். அவ்வாறு நடந்திருந்தால் நாட்டின் நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும். எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தாமல் அமைதியான முறையில் நடவடிக்கையை முன்னெடுத்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றி.

ரணில் கொடுத்த உத்தரவு! அடுத்த நாளே மாறிய நிலைமை - அவரே வெளிப்படுத்தியுள்ள தகவல் (Photos) | Ranil Speech At Pelawatta Army Camp

படையினரின் கடமை

நாடாளுமன்றத்தைப் பாதுகாத்த உங்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் இன்று இந்த விசேட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். பலருக்கு இதன் முக்கியத்துவம் தெரியாது. எனவே இதைப் பற்றி சில விஷயங்களைக் குறிப்பிட விரும்பினேன். இந்த நாட்டைப் பாதுகாப்பதும், இந்த நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் உங்களின் தலையாய கடமையாகும்.

மக்களின் இறையாண்மையை நடைமுறைப்படுத்த 03 பிரதான நிறுவனங்கள் உள்ளன. நாடாளுமன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை. இந்த 3 நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், இந்த நாடு கட்டுப்பாட்டை இழக்கும். அரசியலமைப்பு சிதைகிறது. ஜனநாயகம் இழந்துவிடும்.

ரணில் கொடுத்த உத்தரவு! அடுத்த நாளே மாறிய நிலைமை - அவரே வெளிப்படுத்தியுள்ள தகவல் (Photos) | Ranil Speech At Pelawatta Army Camp

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நீங்கள் நாடாளுமன்றத்தை பாதுகாத்தீர்கள். ஜூலை 9, முன்னாள் ஜனாதிபதியின் வீடு வன்முறையாளர்களால் கைப்பற்றப்பட்டது; பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை செலுத்தும் ஜனாதிபதி அலுவலகம் கையகப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியிடம் நடைமுறைப்படுத்த எந்த நிறுவனமும் இல்லை.

மாலையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான "அலரி மாளிகை" கையகப்படுத்தப்பட்டது. அந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை. அப்போது முன்னாள் ஜனாதிபதி கொழும்பில் இல்லாததாலும், அவர் இருக்கும் இடம் தெரியாததாலும், நான் பதவி விலகுவேன் என்ற நம்பிக்கையில் எனது வீட்டிற்கு தீ வைத்துள்ளார்கள்.

ஆனால் சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் ஒரு பிரதமர் அலுவலகம் மட்டுமே இருந்தது. கடந்த 13ம் திகதி திரும்பி வந்து பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றினர். அப்போது நிர்வாகத்திற்கு இயக்க அலுவலகம் இல்லை. அப்போது ஜனாதிபதி இருந்த ஜனாதிபதி மாளிகையும் இல்லாமல் போய்விட்டது. நிர்வாகியாக இயங்க இடம் கிடைக்கவில்லை. மாலையில் நிலைமை மாறியது. நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர்.

நாடாளுமன்றத்தை கைப்பற்றினால், சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால், நாட்டில் ஆட்சி இல்லை. நீதிமன்றத்தை சுற்றிவளைத்து நீதிமன்றத்தை நிறுத்துவது எளிதான காரியம். மற்ற இரண்டு நிறுவனங்களைப் போல அல்ல. நாடாளுமன்றத்தை இழந்தால் அது பெரிய பிரச்சினையாகிவிடும்.

ரணில் கொடுத்த உத்தரவு! அடுத்த நாளே மாறிய நிலைமை - அவரே வெளிப்படுத்தியுள்ள தகவல் (Photos) | Ranil Speech At Pelawatta Army Camp

அரசியல் சாசனம் பறிபோகும்

அன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. சபாநாயகருக்கு தெரியும், இந்த குழு வருவதை அறிந்ததும், கட்சி தலைவர்கள் கூட்டத்தை முடித்து வைத்தார். நாடாளுமன்றத்தை பாதுகாக்க யாரும் இல்லை. நாடாளுமன்றம் வீழ்ந்தால் அரசியல் சாசனம் பறிபோகும்.

எனவே, அவ்வேளையில் பாதுகாப்புச் சபையின் தலைவர்களிடம் குறிப்பாக சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லியனகே ஆகியோரிடம் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்குமாறு கூறினேன். நாடாளுமன்றத்தை இழந்தால் ஆட்சி பறிபோகும். நாடாளுமன்றம் இல்லாததால், பாதுகாப்பு அமைச்சகத்தை நடைமுறைப்படுத்த முடியாது.

அதனால்தான் எல்லோரையும் நம்பி அந்த வேலையைச் செய்தார்கள். அதன்படி நாடாளுமன்றத்தை கைப்பற்ற வந்தவர்களை சுட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரணில் கொடுத்த உத்தரவு! அடுத்த நாளே மாறிய நிலைமை - அவரே வெளிப்படுத்தியுள்ள தகவல் (Photos) | Ranil Speech At Pelawatta Army Camp

உங்களில் பலர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு இருந்ததால் அடுத்த நாளே நாட்டில் நிலைமை மாறியது. நாடாளுமன்றம் பாதுகாக்கப்படாவிட்டால் இன்று நாட்டில் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இது வடக்கில் நடந்த பெரிய போர்கள் போல் இல்லை, ஜனநாயகத்தை பாதுகாக்க நீங்கள் எடுத்த நடவடிக்கை. பயங்கரவாதத்தை அழித்தது போல் ஜனநாயகத்தையும் பாதுகாத்தீர்கள்.

இந்த நாடாளுமன்ற கட்டடத்தை பாதுகாத்து நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு அனுமதித்ததன் மூலம் அரசியலமைப்பு கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மூலம் நாடும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்போது அதை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முன்னோக்கி கொண்டு சென்று மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.

உங்கள் பணி இப்போது முழுமையடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். புதிய அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வர முயற்சிக்கிறோம். புதிய நாடாளுமன்ற சீர்திருத்த முன்மொழிவுகளை கொண்டு வந்து அனைத்து கட்சி ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ரணில் கொடுத்த உத்தரவு! அடுத்த நாளே மாறிய நிலைமை - அவரே வெளிப்படுத்தியுள்ள தகவல் (Photos) | Ranil Speech At Pelawatta Army Camp

இது விவாதிக்கப்படுகிறது, இப்போது உங்கள் கடமையை செய்யுங்கள். இப்போது நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மற்றும் சபாநாயகர் அவர்களை தயவு செய்து நாடாளுமன்றத்திற்கு நினைவூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொருளாதார பிரச்சினை

இந்த அர்ப்பணிப்பிலிருந்து நாம் பயனடைய விரும்பினால், நாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாம் இந்த நடவடிக்கையை எடுத்ததால், இப்போது நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்து, பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டதால், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமானால், அது நாடாளுமன்றத்தில் செய்யப்பட வேண்டும். அதைப் பாதுகாக்க உழைத்திருக்கிறீர்கள். நாடாளுமன்றம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீங்கள் அனைவரும் பதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள். அதைப் பற்றியும் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இது நம் நாட்டில் ஒரு முக்கிய அலகாகக் கருதப்படுகிறது. 1992 மற்றும் 1993ஆம் ஆண்டுகளில் இந்தப் படையை உருவாக்க வேண்டும் என்று விவாதித்தோம். அதேநேரத்தில், நான் அக்டோபர் மாதம் லண்டன் சென்றேன்.

ரணில் கொடுத்த உத்தரவு! அடுத்த நாளே மாறிய நிலைமை - அவரே வெளிப்படுத்தியுள்ள தகவல் (Photos) | Ranil Speech At Pelawatta Army Camp

நான் லண்டனில் ஜெனரல் மைக்கேல் ரோஸை சந்தித்தேன். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ. ஜெனரல் ரணதுங்க மற்றும் ஜெனரல் அடிகல ஆகியோர் அவருடன் இருந்தனர். அப்படி ஒரு பிரிவைத் தொடங்க வேண்டும் என்றார்.

அப்போதைய இராணுவத் தளபதி திரு.வைத்தியரத்னவிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது, பின்னர் ஜெனரல் ஜெரி சில்வா படையை ஆரம்பித்து இந்தப் பணியை சிறப்பாகத் தொடர்ந்தார். குறிப்பாக அப்போது தொடங்கியதை தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US