யுத்த குற்றச்சாட்டு விசாரணையில் சிக்குவாரா கோட்டாபய: ரணில் கூறிய பதில் என்ன...!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கூட குற்றஞ்சாட்டி அவரை விசாரணைக்கு அழைக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தின்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணை செய்வீர்களா என சர்வதேச ஊடகமொன்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் கூறியுள்ளதாவது, எந்த குற்றச்சாட்டுகளையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
விசாரணைக்கு அழைக்கலாம்
ஆணைக்குழு முன்னிலையில் சென்று எவரையும் குற்றம்சாட்டலாம்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கூட குற்றஞ்சாட்டி அவரை விசாரணைக்கு அழைக்கலாம்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூடிமறைக்கின்றது என எவரும் தெரிவிக்க முடியாது.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் காணப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
