ஆட்சியை கைப்பற்ற ரணில் வகுக்கும் திட்டம்!
ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்களில் புதிய திட்டத்தை வகுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 75வது ஆண்டு விழா செப்டம்பர் 6ம் திகதி வருகின்றது.
இதன்போது தற்போது ஒரே ஒரு நாடாளுமன்ற இடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, இந்த நாட்டில் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான திட்டத்தை முன்வைக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை மாற்றும் திறன் எதிர்க்கட்சியில் உள்ள எந்த கட்சிக்கும் இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
1956ம் ஆண்டு 8 இடங்களை இழந்த ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது என்பதையும் அவர் இளைஞர்களுக்கு நினைவூட்டியுள்ளார்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan