தனக்கு எவரும் போட்டி இல்லை: சவால் விடும் ரணில்
நாட்டை முன்னேற்றுவதில் மாத்திரமே தாம் கவனம் செலுத்துவதால் தனக்கு போட்டி எதுவும் இல்லை என ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்
அத்துடன், தனது திறமையை இரண்டு முறை நிரூபித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் அல்லது கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது. அவ்வாறு செய்தால் இலங்கை நிதியை இழக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணிலின் அழைப்பு
எனவே, அனைத்து வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று ரணில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, தன்னுடன் இணைந்து செயற்படுமாறு அனைவரையும் அழைப்பதாக தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri