ரணிலின் மே தின மேடையில் ஏறப் போகும் மொட்டுக் கட்சி எம்.பி
மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது கட்சியின் மேதினக் கூட்டத்தைப் புறக்கணித்து, ஐக்கிய தேசிய கட்சியின் (United National Party) மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் மேதினக் கூட்டம் இன்று (01.05.2024) பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேதினக் கூட்டம்
இந்நிலையில் அக்கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கயாஷான் நவநந்தன(Gayashan Nawananda) என்பவர் மொட்டுக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக அவர் தனது தேர்தல் தொகுதியான வெல்லவாய தேர்தல் தொகுதியில் இருந்து ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு, கொழும்பு மாளிகாவத்தையில் நடைபெறவுள்ள ஐ.தே.க.வின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா





பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை குழந்தையாக இத்தனை படங்களில் நடித்து இருக்கிறாரா! போட்டோவுடன் இதோ Cineulagam

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
