பதவி விலகினார் பிரித்தானிய இராஜாங்க செயலாளர் ரணில்
பிரித்தானியாவின் உணவு, சுற்றாடல் விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் ரணில் ஜெயவர்த்தன பதவி விலகியுள்ளார்.
பிரதமராக பதவியேற்ற ரிஷி
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து பேன்னி மோர்டாண்ட் விலகியதை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக் தற்போது பதவியேற்றுள்ளார்.
இவர் பிரித்தானியாவின் 57வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
தொடர் பதவி விலகல்
இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதை தொடர்ந்து, நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ் மற்றும் வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக் இருவரும் பதவியில் இருந்து விலகியிருந்தனர்.
இந்த சூழ்நிலையிலேயே ரணில் ஜெயவர்த்தனவும் பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.