அப்பட்டமான பொய்யுரைக்கும் ரணில்! தேர்தல் தாமதமடைய அவரே பொறுப்பு - டலஸ் குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் கூறிய கருத்துக்களில் இருந்து தேர்தல் தாமதத்துக்கு அவரே பொறுப்பு என்பது தெரியவந்துள்ளது என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
சபையில் இன்று அவர் உரையாற்றும் போது மேலும் கூறுகையில்
"பொய் சொல்வதில் மூன்று வகைகள் இருக்கின்றன. முதலாவது பொய், இரண்டாவது புள்ளிவிபரங்களுடன் பொய், மூன்றாவது அப்பட்டமான பொய்.
ஜனாதிபதியே பொறுப்பு
இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று நாடாளுமன்றில் கூறியது, அப்பட்டமான பொய்யாகும். இதுவரை காலமும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தாமதிப்பதற்கான குற்றச்சாட்டு, திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சகர் ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், இன்று ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறிய கருத்துக்களில் இருந்து
ஜனாதிபதியே இதற்குப் பொறுப்பு என்பது தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
