மூன்று நாள் பயணமாக மீண்டும் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில்
வடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் வருகை தரவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான 3 தினங்கள் ஜனாதிபதி வடக்கில் தங்கியிருந்து விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விசேட அபிவிருத்தி
இந்தக் காலப்பகுதியில் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துடன் பல சந்திப்புக்களும், 3 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று 4 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் விசேட கலந்துரையாடலுடன் காணி உறுதி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 மணி நேரம் முன்
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
மீனாவால் விஜயாவிற்கு வந்த ஷாக்கிங் நியூஸ், சீதாவை ஒரு வழி செய்த அருண்... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam