இந்தியா செல்லும் ரணில் : வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை 20 முதல் 21 வரை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்ல உள்ளதாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் இன்று(18.07.2023) உறுதி செய்துள்ளன.
அதன்படி தனது விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளை சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் முதல் விஜயம்
2022ல் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜனாதிபதி விக்ரமசிங்க பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா செல்கிறார்.
இரு நாடுகளும் இந்த ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இந்த விஜயம் இடம்பெறுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
