ரணிலுக்கு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை: விஜித ஹேரத்
அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 40வது பிரிவின்படி ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அடுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை.
ஜனாதிபதித் தேர்தல்
இதன்படி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தொடர்ந்திருந்தால் அவருக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை நடத்தியிருக்க முடியும்.
எனினும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவிற்கு அத்தகைய அதிகாரம் இல்லை.
இந்த நிலையில் 2024 நவம்பருக்குப் பின்னரே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
