ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இணைவாரா?
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்துடன் இணையும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு நெருங்கிய தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.
எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை துபாயில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன், ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக வெளியான தகவலை அடுத்தே, அவர் அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்ள போவதாக ஊகங்கள் எழுந்திருந்தன.
எனினும் இதனை ஐக்கிய தேசியக்கட்சி மறுத்துள்ளது. துபாயில் நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் பங்கேற்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தரப்புகள் தெரிவித்துள்ளன
2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்து சமுத்திர மாநாட்டுக்கான தலைவர் பதவியை ரணில் விக்கிரமசிங்க வகித்து வந்தார்.
இதன் அடிப்படையிலே அவர் டிசம்பர் 5ஆம் திகதி துபாய் மாநாட்டில் உரையாற்றவுள்ளதாக கட்சி தரப்புகள் குறிப்பிட்டுள்ளன.
இந்த மாநாட்டில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 11 மணி நேரம் முன்

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022