எரிசக்தி நெருக்கடிக்கு முழு காரணம் அநுர அரசே! ட்ரம்பின் சூட்சுமங்களை வெளிப்படுத்தும் ரணில்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lanka Government
By Rakesh Mar 09, 2026 06:02 AM GMT
Report

சர்வதேச விவகாரங்களில் தற்போதைய அரசு ஓர் 'ஊமையைப் போல்' மௌனம் காப்பதாகவும், ஜே.வி.பி. கடந்த காலங்களில் ஏற்படுத்திய முட்டுக்கட்டைகளே இன்றைய எரிசக்தி நெருக்கடிக்கு முக்கிய காரணம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(08.03.2026) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரியும் 2,30,000 பேர் வேலையை இழக்கும் அபாயம்!

வெளிநாட்டில் பணிபுரியும் 2,30,000 பேர் வேலையை இழக்கும் அபாயம்!

இலங்கையின் எண்ணெய் சேமிப்பில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையின் எண்ணெய் சேமிப்பு மற்றும் விநியோக முறைகள் குறித்துப் பேசிய அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியின் கொள்கைகளே நாட்டைப் பின்னோக்கித் தள்ளின என தெரிவித்து அவற்றை விவரித்துள்ளார்.

எரிசக்தி நெருக்கடிக்கு முழு காரணம் அநுர அரசே! ட்ரம்பின் சூட்சுமங்களை வெளிப்படுத்தும் ரணில் | Ranil Exposes Trump S Subtleties

"எண்ணெய் சேமிப்பு முறைகள் என்பது காலங்காலமாகப் பயன்பாட்டில் உள்ளவை. முதலில் அமெரிக்க நிறுவனங்களுடனும், பின்னர் எண்ணெய் கூட்டுத்தாபனத்துடனும் நாம் இவற்றை முன்னெடுத்து வந்தோம்.

கடந்த 2003ஆம் ஆண்டில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க நான் முயற்சி செய்தேன். அன்றே அந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், இலங்கைக்கு இன்று இவ்வளவு பெரிய நெருக்கடி வந்திருக்காது. எண்ணெய் தாராளமாகக் கிடைத்திருக்கும். ஆனால் அதனை எதிர்த்தது யார்? ஜே.வி.பி தான் அதனை எம்மால் மறக்க முடியாது." என ரணில் குற்றம் சாடியுள்ளார்.

மேலும், 2015ஆம் ஆண்டிலும் இந்த திட்டம் ஜே.வி.பியால் தடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், 2024ஆம் ஆண்டில் நிறைவடைந்திருக்க வேண்டிய விசாகப்பட்டினம்- இலங்கை இடையிலான எண்ணெய் குழாய் திட்டத்தையும் அநுரகுமார தலைமையிலான தரப்பினரே முடக்கினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"இந்தத் திட்டம் செயற்பாட்டில் இருந்திருந்தால், தற்போதைய நெருக்கடியின் போது நமக்கு உதவுவதை இந்தியா தனது கடமையாகக் கருதியிருக்கும். அதுமட்டுமன்றி, நாம் கொண்டு வந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களையும் இவர்கள் தடுத்தனர்.

இலங்கை மௌனம் காப்பது ஏன்?

தற்போதைய உலகச் சூழல் குறித்து இந்த அரசு மௌனம் காப்பது வியப்பாக உள்ளது. ஓர் ஊமையைப் போலச் செயற்படும் இந்த அரசு, குறைந்தபட்சம் ஈரானிய ஆன்மீகத் தலைவரின் படுகொலையையாவது கண்டித்திருக்க வேண்டும்.

ஒரு நாட்டின் அரசை மற்றொரு நாடு பலவந்தமாக அகற்றும் முறையை ஒருபோதும் ஏற்க முடியாது.

எரிசக்தி நெருக்கடிக்கு முழு காரணம் அநுர அரசே! ட்ரம்பின் சூட்சுமங்களை வெளிப்படுத்தும் ரணில் | Ranil Exposes Trump S Subtleties

இது ஒரு சுதந்திர நாட்டின் இருப்புத் தொடர்பான ஆழமான பிரச்சினையாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகைத் தனது விருப்பப்படி இயக்க முயற்சிக்கின்றார். இஸ்ரேலுடன் இணைந்து ஈரானுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர ட்ரம்ப் நினைத்தார்.

சுவிட்சர்லாந்து, நோர்வே போன்ற நாடுகள் இந்தச் செயல்கள் சர்வதேச சட்டத்துக்கு முரணானது எனத் தைரியமாகக் கூறியுள்ளன.

ஆனால் இலங்கை அரசு இன்னும் ஒரு முறையான அறிக்கையை வெளியிடாமல், போர் நிறுத்தப்பட வேண்டும் என்று மட்டும் கூறி நழுவுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார். 

மத்தியக் கிழக்கு மோதல் நிலை! 2022 இற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள எரிபொருள் விலை..

மத்தியக் கிழக்கு மோதல் நிலை! 2022 இற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள எரிபொருள் விலை..

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்தது போன்ற நிலையை அனுபவிக்கும் இஸ்ரேல்! சிறீதரன் எம்.பி

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்தது போன்ற நிலையை அனுபவிக்கும் இஸ்ரேல்! சிறீதரன் எம்.பி


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US