எரிசக்தி நெருக்கடிக்கு முழு காரணம் அநுர அரசே! ட்ரம்பின் சூட்சுமங்களை வெளிப்படுத்தும் ரணில்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lanka Government
By Rakesh Mar 09, 2026 06:02 AM GMT
Report

சர்வதேச விவகாரங்களில் தற்போதைய அரசு ஓர் 'ஊமையைப் போல்' மௌனம் காப்பதாகவும், ஜே.வி.பி. கடந்த காலங்களில் ஏற்படுத்திய முட்டுக்கட்டைகளே இன்றைய எரிசக்தி நெருக்கடிக்கு முக்கிய காரணம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(08.03.2026) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரியும் 2,30,000 பேர் வேலையை இழக்கும் அபாயம்!

வெளிநாட்டில் பணிபுரியும் 2,30,000 பேர் வேலையை இழக்கும் அபாயம்!

இலங்கையின் எண்ணெய் சேமிப்பில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையின் எண்ணெய் சேமிப்பு மற்றும் விநியோக முறைகள் குறித்துப் பேசிய அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியின் கொள்கைகளே நாட்டைப் பின்னோக்கித் தள்ளின என தெரிவித்து அவற்றை விவரித்துள்ளார்.

எரிசக்தி நெருக்கடிக்கு முழு காரணம் அநுர அரசே! ட்ரம்பின் சூட்சுமங்களை வெளிப்படுத்தும் ரணில் | Ranil Exposes Trump S Subtleties

"எண்ணெய் சேமிப்பு முறைகள் என்பது காலங்காலமாகப் பயன்பாட்டில் உள்ளவை. முதலில் அமெரிக்க நிறுவனங்களுடனும், பின்னர் எண்ணெய் கூட்டுத்தாபனத்துடனும் நாம் இவற்றை முன்னெடுத்து வந்தோம்.

கடந்த 2003ஆம் ஆண்டில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க நான் முயற்சி செய்தேன். அன்றே அந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், இலங்கைக்கு இன்று இவ்வளவு பெரிய நெருக்கடி வந்திருக்காது. எண்ணெய் தாராளமாகக் கிடைத்திருக்கும். ஆனால் அதனை எதிர்த்தது யார்? ஜே.வி.பி தான் அதனை எம்மால் மறக்க முடியாது." என ரணில் குற்றம் சாடியுள்ளார்.

மேலும், 2015ஆம் ஆண்டிலும் இந்த திட்டம் ஜே.வி.பியால் தடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், 2024ஆம் ஆண்டில் நிறைவடைந்திருக்க வேண்டிய விசாகப்பட்டினம்- இலங்கை இடையிலான எண்ணெய் குழாய் திட்டத்தையும் அநுரகுமார தலைமையிலான தரப்பினரே முடக்கினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"இந்தத் திட்டம் செயற்பாட்டில் இருந்திருந்தால், தற்போதைய நெருக்கடியின் போது நமக்கு உதவுவதை இந்தியா தனது கடமையாகக் கருதியிருக்கும். அதுமட்டுமன்றி, நாம் கொண்டு வந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களையும் இவர்கள் தடுத்தனர்.

இலங்கை மௌனம் காப்பது ஏன்?

தற்போதைய உலகச் சூழல் குறித்து இந்த அரசு மௌனம் காப்பது வியப்பாக உள்ளது. ஓர் ஊமையைப் போலச் செயற்படும் இந்த அரசு, குறைந்தபட்சம் ஈரானிய ஆன்மீகத் தலைவரின் படுகொலையையாவது கண்டித்திருக்க வேண்டும்.

ஒரு நாட்டின் அரசை மற்றொரு நாடு பலவந்தமாக அகற்றும் முறையை ஒருபோதும் ஏற்க முடியாது.

எரிசக்தி நெருக்கடிக்கு முழு காரணம் அநுர அரசே! ட்ரம்பின் சூட்சுமங்களை வெளிப்படுத்தும் ரணில் | Ranil Exposes Trump S Subtleties

இது ஒரு சுதந்திர நாட்டின் இருப்புத் தொடர்பான ஆழமான பிரச்சினையாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகைத் தனது விருப்பப்படி இயக்க முயற்சிக்கின்றார். இஸ்ரேலுடன் இணைந்து ஈரானுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர ட்ரம்ப் நினைத்தார்.

சுவிட்சர்லாந்து, நோர்வே போன்ற நாடுகள் இந்தச் செயல்கள் சர்வதேச சட்டத்துக்கு முரணானது எனத் தைரியமாகக் கூறியுள்ளன.

ஆனால் இலங்கை அரசு இன்னும் ஒரு முறையான அறிக்கையை வெளியிடாமல், போர் நிறுத்தப்பட வேண்டும் என்று மட்டும் கூறி நழுவுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார். 

மத்தியக் கிழக்கு மோதல் நிலை! 2022 இற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள எரிபொருள் விலை..

மத்தியக் கிழக்கு மோதல் நிலை! 2022 இற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள எரிபொருள் விலை..

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்தது போன்ற நிலையை அனுபவிக்கும் இஸ்ரேல்! சிறீதரன் எம்.பி

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்தது போன்ற நிலையை அனுபவிக்கும் இஸ்ரேல்! சிறீதரன் எம்.பி


அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US