தீர்வுக்கான தகைமை ரணிலுக்கு உண்டாம்: விக்னேஸ்வரன்
நாட்டின் நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்கான தகைமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தாமும் அவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிபந்தனைகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் பங்கேற்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தங்களது கோரிக்கைகளுக்கான இணக்கத்தைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க
எழுத்து மூலம் வழங்கினால் அமைச்சரவையில் பங்கேற்கலாம் எனவும் அவர் மேலும்
கூறியுள்ளார்.