ரணிலின் கைதினை தொடர்ந்து கேள்வியெழுப்பும் அரசியல்வாதிகள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி யூடியூபர் சுதத்த திலகசிறிக்கு எவ்வாறு முன்கூட்டியே தெரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றையதினம் சுதத்த திலகசிறி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவார் என்று காணொளியொன்றினை வெளியிட்டார்.
ரணில் கைது
ரணில் விக்ரமசிங்க வாக்குமூலம் பதிவு செய்வதற்கு முன்பு, இன்று கைது செய்யப்படுவார் என்று கூறினார்.
இவ்வாறு குறித்த யூடியூபர் தெரிவிப்பது நகைச்சுவையாக உள்ளது என நாடாளுமன்றில் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அலி சப்ரி வெறுப்பு மற்றும் பழிவாங்கும் சுழற்சியினை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பழிவாங்கும் நோக்கம்
சமூக ஊடகங்களில் அவர் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,
மூன்று பெரிய நெருக்கடிகளின் போது நாட்டை நிலைநிறுத்துவதில் விக்ரமசிங்க முக்கிய பங்கு வகித்தார்.
1993 இல், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டில், இலங்கையின் முதல் மந்தநிலையின் போது; மற்றும் 2022 இல், நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் இருந்த போது அவர் நாட்டை மீட்டுவந்தார்.
இந்தப் பின்னணியில், ஒரு யூடியூபர் கணித்தபடி அவர் கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலையளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் நமது நிறுவனங்களையும் எதிர்காலத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பழிவாங்கும் மற்றும் அழிவுகரமான அரசியலின் தொந்தரவான போக்கை பிரதிபலிக்கின்றன.
இந்த சுழற்சி முடிவுக்கு வர வேண்டும். இலங்கை பகுத்தறிவு மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட அரசியலுக்கு தகுதியானது என்று குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri
