25 மில்லியனை நிராகரித்த ரணில்: சுற்றிவளைக்கும் அநுரவின் விசாரணை திட்டம்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது சிங்கப்பூர் நிறுவனம் வழங்கிய 25 மில்லியன் இழப்பீட்டு தொகையை நிராகரித்து 10 மில்லியனை மாத்திரம் ரணில் விக்ரமசிங்க பெற்றுக்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.
குறித்த விபத்தின் காரணமாக இலங்கையின் கடற்பரப்பிற்கு 6.4 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை மதிப்பிட்டிருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க 25 மில்லியன் இழப்பீட்டு தொகையை நிராகரித்திருந்தார்.
இதன் காரணமாக ரணில் மீதான அழுத்தங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது அமெரிக்கா தனது நடவடிக்கை மூலம் இலங்கையின் உள்ளுர் அரசியலை தம்வசம்படுத்த முயற்சிப்பதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தற்போது தனது அதிகாரவரம்பினை மீறி செயற்படுவதாகவும், கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்சவின் வெளியேற்றத்தில் அமெரிக்காவே முடிவெடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக இலங்கையின் புலனாய்வுத்துறையை மீறி அமெரிக்காவின் புலனாய்வுத்துறையே தற்போது இலங்கையில் செயற்பட்டு வருவதாகவும் இது அநுர அரசிற்கு எச்சரிக்கை செய்தி என்றும் கூறப்படுகின்றது.
பிரித்தானியாவிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் அருஸ் இந்த விடயம் உள்ளிட்ட மேலும் பல விரிவான தகவல்களை எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளக்கமளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri