நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள ரணில் மற்றும் வடிவேல் சுரேஷ்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்று நாடாளுமன்றத்தில் வாதப்பிரதிவாதத்தில் ஈடுபட்டனர்.
தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் அலுவலகத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி வடிவேல் சுரேஷ் ஒரு வரப்பிரசாதப் பிரச்சினையை எழுப்பியபோதே இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது வடிவேல் சுரேஷின் கேள்விக்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க,
நீதிமன்ற வழக்கு முடிந்த பின்னரே சபாநாயகர் இந்த விடயத்தை பார்க்க முடியும் என்று அவர் கூறினார். எனினும் ஒரு தொழிற்சங்கவாதிக்கு நீதி வழங்கப்படுவதை, ரணில் விக்ரமசிங்க, தடுப்பது, நியாயமில்லை என்று வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார்.
"தாம் ஒரு தொழிற்சங்கவாதி. எனவே தனக்கு நீதி வழங்கப்படுவதை தடுக்க முடியாது, என்றும் ரணிலிடம் கூறியுள்ளார்.
இதன்போது தயவுசெய்து இந்த பைத்தியக்காரனை உட்கார வைக்கவும் "என ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது, விவாதத்தில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ரணில் விக்கிரமசிங்க இந்த விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியது சரிதான், ஆனால் சுரேஷ், நாடாளுமன்ற வரப்பிரசாத்தையே கோருகின்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.