தேர்தலை நடத்தினால் ஜனாதிபதிக்கே வெற்றி:ரணில் யுக புருஷர்-நிமல் சிறிபால
சர்வஜன வாக்கெடுப்பு அல்லது தேர்தல் ஒன்றை நடத்தினால், ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள், சிறப்பான தலைமைத்துவதை நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எந்த தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்வார்கள் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரணில் சவாலை அச்சமின்றி ஏற்றுக்கொண்ட யுக புருஷர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவாலை எதிர்கொள்ள அச்சமின்றி முன்வந்த யுக புருஷர். அவர் தனது அரசியல் எதிர்காலம் பற்றியோ, வேறு விடயங்கள் குறித்தோ பேசாது சவாலை பொறுப்பேற்றார்.
தற்போது நாட்டின் பிரச்சினைகள் சிறிது சிறிதாக தீர்க்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடு செல்லும் திசை மிக தெளிவானது எனவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam