ரணில் விக்ரமசிங்க சிறந்த உலகத் தலைவர் - வஜிர அபேவர்தன புகழாரம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வல்லரசு நாடுகளின் தலைவர்களை விடவும் சிறந்த தலைவர் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியால் மட்டுமே இலங்கைக்குப் பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், அனைவரும் ஒன்றிணைவோம் என ஜனாதிபதி தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகின்றார்.
வெளிநாட்டு சக்திகள்
நாம் பிளவுபட்டு நின்றால் தான் வெளிநாட்டு சக்திகள் நாட்டுக்குள் நுழையும். அரசியல் கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் தேசிய ஒற்றுமைக்காக ஒன்றிணைய வேண்டும்.
அப்போது ஜனாதிபதியால் பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க
முடியும்.
நாம் பிரிந்து நின்றால் நாடு விழும். நாட்டை நிர்வகிக்ககூடிய சிறந்த தலைவர்
ரணில் விக்ரமசிங்க என்பதால் தான் நாம் அவர் பின்னால் நிற்கின்றோம்.
அமெரிக்க ஜனாதிபதி பைடன், ரஷ்யா ஜனாதிபதி புடின் ஆகியோரை விடவும் ரணில் விக்ரமசிங்க சிறந்த தலைவர் என நான் குறிப்பிட்டிருந்தேன்.
ஆம். புடின் 1999 இல்தான் அரசியலுக்கு வந்தார். நாடுகள் பெரிதாக இருக்கலாம், சொத்துக்கள் இருக்கலாம். பொருளாதார ரீதியில் முன்னேறி இருக்கலாம். ஆனால், எமது நாட்டுத் தலைவருடன் ஒப்பிட முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்லும்போது, அவர் ஜனாதிபதி ஆவார் என கூறினோம். மறுநாள் எனக்குப் பைத்தியம் என்றார்கள். நடந்தது என்ன? ஏனெனில் ரணிலின் நகர்வுகள் எமக்குத் தெரியும் என தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 33 நிமிடங்கள் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
