திருகோணமலை மாபிள் பீச் கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர் மாயம்
திருகோணமலை - மாபிள் பீச் கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனக்குடா பொலிஸார் காணாமல் போன இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளததாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தேடும் பணியில் கடற்படை
குருநாகல் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு பேருந்தில் ஒன்றில் 23 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா வந்ததாகவும் நேற்று (29) மாலை மாபிள் பீச் கடற்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் போது நான்கு பேரில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் கடற்படையினரும் - கடற்றொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
குருநாகல் - மாவதகம - இங்குருவத்த பகுதியைச் சேர்ந்த சுதர்சன பிரபோத் சுபசிங்க (18 வயது) இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam