2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி! மரணித்த அதிகாரி தொடர்பில் அநுர அரசாங்கத்திடம் விசாரணை கோரும் எதிர்க்கட்சி
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் மற்றும் 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் முறையான மற்றும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்புப் படையணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க வலியுறுத்தியுள்ளார்.
எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் நேற்று(03.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
நிஷாந்தவின் மரணத்தின் பின்னணி
2.5 மில்லியன் டொலர் திருட்டுச் சம்பவம் தொடர்பாகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த ரங்க நிஷாந்த என்பவர், ஜே.வி.பி. அமைப்பின் உறுப்பினர் எனவும், அவர் முறையான பதவி உயர்வுகள் இன்றி அரசியல் செல்வாக்கின் மூலமே நிதி அமைச்சுக்கு நியமிக்கப்பட்டவர் எனவும் நிரோஷன் பாதுக்க சுட்டிக்காட்டியள்ளார்.

அத்துடன், அவரது மரணம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில், உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளது எனவும், அநேகமாக அந்தக் காயங்கள் அவராகவே ஏற்படுத்திக் கொண்டவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை மறுத்த நிரோஷன் பாதுக்க, "தனது கையின் நரம்பையும் காலின் நரம்பையும் வெட்டிக்கொண்ட ஒருவர், மற்றுமொரு நரம்பை வெட்டும் அளவுக்கு பலமாக இருப்பாரா என்பது பாரிய சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது. இது ஒரு மர்மமான மரணம் என்பதால் வெறும் சாதாரண மரண விசாரணையோடு இதனை முடித்துவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி
மேலும், மத்திய வங்கியின் வசம் 75 ஆண்டுகளாக இருந்த அரச கடன் முகாமைத்துவப் பணிகள் 2026 ஜனவரி முதல் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த 2.5 மில்லியன் டொலர் திருட்டு 2025 டிசம்பர் மற்றும் 2026 ஜனவரிக்கு இடைப்பட்ட காலத்திலேயே இடம்பெற்றுள்ளது. நிதி அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரின் பொறுப்பின் கீழ் இப்பணிகள் இருந்தபோதே இந்த மோசடி நடந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஜனாதிபதியின் அண்மைக்கால செயற்பாடுகள் மற்றும் மே தின உரையை விமர்சித்த அவர், மே 25ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது என ஜனாதிபதி முன்கூட்டியே அறிவித்தமையானது நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் செயல் என்றும் சாடியுள்ளார்.
அத்துடன், துறைமுக கொள்கலன் மோசடி, நிலக்கரி மோசடி மற்றும் நிதி அமைச்சின் திருட்டுச் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி ஏன் மௌனம் காக்கின்றார் என்றும் இதன்போது அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026