இலங்கை அரசை குற்றம் சாட்டிய ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் (VIDEO)

Srilanka India Government Fisherman Rameswaram accuse
By Ashik Mar 24, 2022 01:55 PM GMT
Report

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர பல ஆயிரம் கோடி ரூபாவை நிதி உதவியாக இந்திய அரசிடம் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, அதற்கு கைமாறாக தமிழக கடற்தொழிலாளர்கள் 16 பேரை சிறைபிடித்துள்ளதாக ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து நாளை (25) முதல் ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் இன்று  (24) காலை இராமேஸ்வரத்தில் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்தொழில் துறை முகங்களில் இருந்து அரசு கடற்தொழில் அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை கடற்தொழிலுக்கு கடலுக்குள் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 கடற்தொழிலாளர்களையும், மண்டபத்தைச் சேர்ந்த 4 கடற்தொழிலாளர்கள் என மொத்தமாக 16 கடற்தொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இலங்கை அரசை குற்றம் சாட்டிய ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் (VIDEO) | Rameswaram Fishermen Accuse Sri Lankan Government

கடற்தொழிலாளர்கள் மீதான இந்த கைது நடவடிக்கையை கண்டித்து இன்று (24) காலை ராமேஸ்வரம் கடற்தொழில் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு கடற்தொழில் சங்க கடற்தொழிலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை நாட்டை மீட்பதற்காக இந்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.

இலங்கை அரசை குற்றம் சாட்டிய ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் (VIDEO) | Rameswaram Fishermen Accuse Sri Lankan Government

நிதி உதவியை பெற்றுக் கொண்ட இலங்கை அரசு அதற்கு கைமாறாக ஒரே இரவில் 16 கடற்தொழிலாளர்களை சிறை பிடித்துள்ளது. இதற்கு ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதுடன், தமிழக கடற்தொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து நாளை (25) முதல் ராமேஸ்வரம் விசைப்படகு கடற்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முடிவு செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் சனிக்கிழமை (26) காலை ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே கடற்தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.

இலங்கை அரசை குற்றம் சாட்டிய ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் (VIDEO) | Rameswaram Fishermen Accuse Sri Lankan Government

மேலும் கடற்தொழிலை மட்டுமே நம்பி வாழக் கூடிய சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், வேலணை 4ம் வட்டாரம், Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, கொழும்பு, வவுனியா, Southall, United Kingdom, East Ham, United Kingdom

30 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US