றம்புக்கண சம்பவம்: எரிபொருள் பௌசரின் சாரதி வெளியிட்டுள்ள புதிய தகவல்
றம்புக்கணயில் இடம்பெற்ற கலவரத்தின் போது, ஒரு குழுவினர் அங்கிருந்த எரிபொருள் பௌசரை முன்னோக்கி செலுத்துமாறு வற்புறுத்தியதாக பௌசரின் சாரதி தெரிவித்துள்ளார்.
றம்புக்கணயில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய எரிபொருள் பௌசரின் சாரதியும் உதவியாளரும் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர்.
இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது பௌசரின் உதவியாளர் தெரிவிக்கையில்,
“எரிபொருள் ஏற்றிக்கொண்டு காலை 10.30 மணிக்கு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து கிளம்பினோம்.12.30 அல்லது 1 மணிக்கு கூட்டுறவு சங்கத்திற்கு முன்னால் உள்ள றம்புக்கணை பெட்ரோல் பங்கிற்கு சென்றோம்.
அப்போது எங்களுக்கு முன்னால் சென்ற பௌசர் வெகு தொலைவில் இருப்பதை பார்த்தோம். அதே நேரத்தில் நாங்கள் முன்னேற வேண்டியிருந்தது. சிலர் வந்து எங்களை முன்னோக்கி அழைத்துச் சென்றனர்.
எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, எங்களுக்கு உணவளிக்கப்பட்டது, குடிநீர் கொடுத்தார்கள். இரண்டு பௌசர்களையும் அகற்ற பொலிசார் கடுமையாக முயன்றனர். இயலாத பட்சத்தில் பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பௌசரின் சாரதி தெரிவிக்கையில்,
“நான் ஓட்டுநர் இருக்கையில் இருந்தபோது நான்கு சக்கரங்களிலும் மக்கள் காற்றைத் திறந்தனர், பௌசரை முன்னால் எடுக்குமாறு பொலிஸார் என்னிடம் தெரிவித்த போதும் என்னால் பௌசரை முன்னால் எடுக்க முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
