ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையாகிய இலங்கையர்கள் கட்டுநாயக்காவில் கைது செய்யப்படுவார்களா...!(Video)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகிய இலங்கையர்களுக்கு தற்காலிக அடையாள சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகிய இலங்கையர்கள் வேறு நாடுகளுக்கு சென்று வருவதற்கான அடையாள சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கையை இலங்கை தூதரகம் செய்கின்றது.
இந்த அடையாள சான்றிதழ் ஆறு மாதத்திற்கு செல்லுபடியாகும்.
குறித்த இலங்கையர்கள்,இலங்கையர்கள் தானா என்பதை அந்தந்த மாவட்ட கச்சேரி ஊடாக உறுதிபடுத்திய பின்னரே வழங்கப்படும்.
கடந்த மூன்று தினங்களாக இலங்கை பொலிஸ் தரப்பும்,இந்திய உள்துறையும் இனைந்து இந்த பணிகளை செய்து வருகின்றன.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam