சாந்தனின் மரணத்தை அறியாமல் காத்திருக்கும் தாய்
சாந்தனின் மரண செய்தி கடுமையான சுகயீனத்தில் உள்ள அவரது அன்னைக்கு இன்று மாலை வரை அறிவிக்கப்படவில்லை என தெரியவருகின்றது.
இன்று மாலை செய்தியாளர்கள் சாந்தனின் பூர்வீக இல்லம் அமைந்துள்ள உடுப்பிட்டிப் பகுதிக்குச் சென்ற போது தனது புதல்வரான சாந்தன் வீடு திரும்பவுள்ள மகிழ்ச்சியில் தாயார் இருந்ததாக உடுப்பிட்டி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பூதவுடல் கொண்டுவரப்படவுள்ளது
தகவல் அறிந்து பலரும் செல்வார்கள் என்பதால் தாயார் தற்போது வேறு வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது மகன் வருவார் என ஏக்கத்திலேயே சாந்தனின் தாயார் இருந்தார் எனவும் உடுப்பிட்டி பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு ராஜீவ்காந்தி வைத்தியசாலையில் உயிரிழந்த சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவரது பூதவுடல் விரைவில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
