தென்னிலங்கையில் தலைமறைவாகியுள்ள பிரபல அரசியல்வாதி : தீவிர தேடுதல் நடவடிக்கை தீவிரம்
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகிய நிலையில் தனது தொலைபேசியையும் துண்டித்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை சட்ட நடைமுறைகளை மீறி கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 2.62 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் சந்தேக நபராக ராஜித சேனாரத்ன பெயரிடப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
பிணை மனு தாக்கல்
இந்த சம்பவம் தொடர்பாக ராஜித சேனாரத்ன உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் மூலம் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஆணைக்குழுவிற்கு வந்து வாக்குமூலம் அளிப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் தெரிவித்ததாகவும், ஆனால் முன்னாள் அமைச்சர் முன்னிலையாகாததால் அவரை கைது செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவரைக் கைது செய்ய பல தனித்தனி குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மருத்துவ அறிக்கை
இந்த விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு பல சந்தர்ப்பங்களில் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு பொய்யான விடயங்களை முன்வைத்து அவர் தொடர்ந்து வாக்குமூலம் வழங்குவதை தவிர்த்து வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ராஜித சேனாரத்ன, தான் ஒரு மருத்துவப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, வழக்கறிஞர் மூலம் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அதில் அது எந்த சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மையும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 20 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
