அர்ச்சுனா கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை தவறு..! ரஜீவன் எம்.பி காட்டம்
இராமநாதன் அர்ச்சுனா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனவே மக்கள் சில கேள்விகளை அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக கேட்பார்கள். எனவே அவர் அந்த கேள்விகளை மக்கள் சார்பாக கேட்க வேண்டிய தேவை இருக்கின்றது.
அவ்வாறான கேள்விகளை கேட்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் அதனை தடுப்பது ஜனநாயகம் அல்ல. அந்த இடத்திலிருந்து அர்ச்சுனாவை வெளியேறச் சொல்வதற்கு அமைச்சருக்கோ அல்லது வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் அவரை தொடர்புகொண்டு வினவியபோது கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளும் சரியான வகையில் பதில் கூற வேண்டும். அவ்வாறு அதிகாரிகள் பதில் கூறும் பொழுது அதற்கு அந்த மக்கள் பிரதிநிதியும் கட்டுப்பட வேண்டும்.

ஒரு வாரத்தில் விசாரணை செய்கிறோம், அல்லது ஒரு விசாரணை குழு அமைக்கிறோம் என்று அதிகாரிகள் கூறும்போது அவர் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதேவேளை கூட்டத்தை தலைமை தாங்கும் தலைவரும் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்தாவிட்டால் அங்கு தலைமைத்துவம் இல்லாமல் போய்விடும்.
தொடர்ந்து குழப்பும் வாய்ப்பு
நேற்றைய கூட்டத்திற்குள் கமக்கார அமைப்பினர் என்று கூறிக்கொண்டு சிலர் உள்ளே வந்துள்ளனர். அவர்கள் சிறீதரன் எம்.பியின் ஆட்களாக சுட்டிக்காட்டப்பட்டனர்.
அவர் கடந்த காலங்களில் இடையிடையே கூட்டத்தை விட்டுவிட்டு எழும்பி சென்று விடுவார், அதன்போது அவரது ஆட்களும் எழும்பி சென்று விடுவார்கள். அது பிழை.

வடக்க மாகாணத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் தமது நேரத்தினை ஒதுக்கி நேற்றைய கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அதற்காக எரிபொருள் செலவு என பல செலவுகள் உள்ளன.
இந்நிலையில் கூட்டம் நிறுத்தப்பட்டது தவறு. சிறீதரனோ அர்ச்சுனாவோ வெளியே போனாலும் கூட்டம் முழுமையாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக கூட்டத்தை நிறுத்தி பழக்கினால் அது கூட்டத்தை குழப்பலாம் என்ற சிந்தனை வந்துவிடும். அதற்கு இடமளிக்க கூடாது. ஒரு விடயத்தை கூட்டத்தில் பேசும்போது அதனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரோ அல்லது மாவட்ட செயலாளரோ அல்லது பிரதேச செயலர் ஊடாகவோ நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வந்து அதனை பேச வேண்டும்.
இடைநிறுத்தப்படும் கூட்டங்கள்
ஒரு அதிகாரி தவறு செய்தால் அதனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விசாரணை செய்ய முடியாது. அதற்காக முறைப்பாடு பதிவு செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளது, பொலிசார் உள்ளார்கள், வேறு வேறு இடங்கள் உள்ளன.
அந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் குற்றவாளியா இல்லையா என்று கூற முடியும், அதனை விட்டு ஒரு பொது வெளியில் குற்றவாளி என்று யாரையும் குற்றம் சாட்ட முடியாது.

அரசாங்க அதிகாரிகளை விரக்திக்கு உள்ளாக்க கூடாது. அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் இருக்கும்போது அவரை மீறி அர்ச்சுனா பேசியிருக்கக் கூடாது. அவரது கருத்துக்கு அர்ச்சுனா கட்டுப்பட வேண்டும்.
அதனை கட்டுப்படுத்த ஒரு பொறிமுறை வேண்டும். அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தொடர்ச்சியாக அர்ச்சுனா குழப்புவதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று நாங்கள் கூடி பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam