அர்ச்சுனா கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை தவறு..! ரஜீவன் எம்.பி காட்டம்

Kilinochchi Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Ramanathan Archchuna
By Kajinthan Jul 17, 2026 07:00 AM GMT
Report

இராமநாதன் அர்ச்சுனா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனவே மக்கள் சில கேள்விகளை அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக கேட்பார்கள். எனவே அவர் அந்த கேள்விகளை மக்கள் சார்பாக கேட்க வேண்டிய தேவை இருக்கின்றது.

அவ்வாறான கேள்விகளை கேட்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் அதனை தடுப்பது ஜனநாயகம் அல்ல. அந்த இடத்திலிருந்து அர்ச்சுனாவை வெளியேறச் சொல்வதற்கு அமைச்சருக்கோ அல்லது வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் அவரை தொடர்புகொண்டு வினவியபோது கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மட்டக்களப்பு கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிளிநொச்சி கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவர் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளும் சரியான வகையில் பதில் கூற வேண்டும். அவ்வாறு அதிகாரிகள் பதில் கூறும் பொழுது அதற்கு அந்த மக்கள் பிரதிநிதியும் கட்டுப்பட வேண்டும்.

அர்ச்சுனா கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை தவறு..! ரஜீவன் எம்.பி காட்டம் | Rajeev S Criticism Of Archuna Mp

ஒரு வாரத்தில் விசாரணை செய்கிறோம், அல்லது ஒரு விசாரணை குழு அமைக்கிறோம் என்று அதிகாரிகள் கூறும்போது அவர் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதேவேளை கூட்டத்தை தலைமை தாங்கும் தலைவரும் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்தாவிட்டால் அங்கு தலைமைத்துவம் இல்லாமல் போய்விடும்.

தொடர்ந்து குழப்பும் வாய்ப்பு

நேற்றைய கூட்டத்திற்குள் கமக்கார அமைப்பினர் என்று கூறிக்கொண்டு சிலர் உள்ளே வந்துள்ளனர். அவர்கள் சிறீதரன் எம்.பியின் ஆட்களாக சுட்டிக்காட்டப்பட்டனர்.

அவர் கடந்த காலங்களில் இடையிடையே கூட்டத்தை விட்டுவிட்டு எழும்பி சென்று விடுவார், அதன்போது அவரது ஆட்களும் எழும்பி சென்று விடுவார்கள். அது பிழை.

அர்ச்சுனா கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை தவறு..! ரஜீவன் எம்.பி காட்டம் | Rajeev S Criticism Of Archuna Mp

வடக்க மாகாணத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் தமது நேரத்தினை ஒதுக்கி நேற்றைய கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அதற்காக எரிபொருள் செலவு என பல செலவுகள் உள்ளன.

இந்நிலையில் கூட்டம் நிறுத்தப்பட்டது தவறு. சிறீதரனோ அர்ச்சுனாவோ வெளியே போனாலும் கூட்டம் முழுமையாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ச்சியாக கூட்டத்தை நிறுத்தி பழக்கினால் அது கூட்டத்தை குழப்பலாம் என்ற சிந்தனை வந்துவிடும். அதற்கு இடமளிக்க கூடாது. ஒரு விடயத்தை கூட்டத்தில் பேசும்போது அதனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரோ அல்லது மாவட்ட செயலாளரோ அல்லது பிரதேச செயலர் ஊடாகவோ நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வந்து அதனை பேச வேண்டும்.

இடைநிறுத்தப்படும் கூட்டங்கள்

ஒரு அதிகாரி தவறு செய்தால் அதனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விசாரணை செய்ய முடியாது. அதற்காக முறைப்பாடு பதிவு செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளது, பொலிசார் உள்ளார்கள், வேறு வேறு இடங்கள் உள்ளன.

அந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் குற்றவாளியா இல்லையா என்று கூற முடியும், அதனை விட்டு ஒரு பொது வெளியில் குற்றவாளி என்று யாரையும் குற்றம் சாட்ட முடியாது.

அர்ச்சுனா கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை தவறு..! ரஜீவன் எம்.பி காட்டம் | Rajeev S Criticism Of Archuna Mp

அரசாங்க அதிகாரிகளை விரக்திக்கு உள்ளாக்க கூடாது. அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் இருக்கும்போது அவரை மீறி அர்ச்சுனா பேசியிருக்கக் கூடாது. அவரது கருத்துக்கு அர்ச்சுனா கட்டுப்பட வேண்டும்.

அதனை கட்டுப்படுத்த ஒரு பொறிமுறை வேண்டும். அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தொடர்ச்சியாக அர்ச்சுனா குழப்புவதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று நாங்கள் கூடி பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்மமான முறையில் மரணம்

ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்மமான முறையில் மரணம்

இலங்கை சந்தித்துள்ள மிகப்பெரிய நட்டம்

இலங்கை சந்தித்துள்ள மிகப்பெரிய நட்டம்


7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US