குடும்ப ஆட்சி நடத்தும் ராஜபக்சக்கள், நாட்டுக்கு ஒரு சாபம்: ஹிருணிகா பிரேமச்சந்திர காட்டம்
"குடும்ப ஆட்சி நடத்தும் ராஜபக்சக்கள், நாட்டுக்கு ஒரு சாபம் ஆகும்." என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தற்போதைய அரசு எவரின் ஆலோசனையையும் செவிமடுப்பதில்லை; தன்னிச்சையாகத் தீர்மானம் எடுக்கின்றது. மின்சாரக் கட்டணம் ஐந்து மடங்கு அதிகரிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுக்கமான பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் அரசுக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சிறந்த பொருளாதார அறிவுள்ளது.
தற்போதைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிச்சையாகச் செயற்படுகின்றார். இந்தியாவிடமிருந்து பெற்ற கடனைச் செலவு செய்த பின்னர் அவர் கடன் பெறுவதற்காக வேறு ஒரு நாட்டுக்குச் செல்வார்.
ஜனாதிபதியாலோ, பிரதமராலோ பசில் ராஜபக்சவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ராஜபக்சகளின் குடும்ப ஆட்சியில் பசிலின் கை மேலோங்கியுள்ளது.
குடும்ப ஆட்சி
நடத்தும் ராஜபக்சக்கள், நாட்டுக்கு ஒரு சாபம் ஆகும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
