ராஜபக்ச அரசாங்கம் குற்றமற்றவர்கள்: நாமல் பகிரங்க சவால்
ராஜபக்ச அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நாமல்,
"நாங்கள் எங்களின் தனிப்பட்ட தேவைக்காக சாலைகள் அமைக்கவில்லை, தனிப்பட்ட தேவைக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவில்லை, தனிப்பட்ட தேவைக்காக முதலீட்டாளர்களை கொண்டு வரவில்லை.
தொலைநோக்கு பார்வை
இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற திட்டமும், தொலைநோக்கு பார்வையும் மாத்திரமே இருந்தது. நாம் செய்த ஒவ்வொரு முதலீட்டிற்கும் நாமே பொறுப்பு.

இந்த பூமிக்கு ஒவ்வொரு மதிப்பையும் கொடுத்துள்ளோம். மகிந்த ராஜபக்சவின் காலத்தில் நாம் வாங்கிய கடனுக்கு நாம் தான் பொறுப்பு.
திருடிவிட்டோம் என்று யாராவது சொன்னால், உலகில் எந்த நீதிமன்றத்துக்கும் சென்று நிரபராதி என்பதை நிரூபிக்கத் தயார் என்று சவால் விடுகிறோம்.
கைகளில் இரத்தம் இல்லை
போராட்டத்துக்குப் பிறகு இந்தத் தேர்தலை எதிர்கொள்ள பயப்படுகிறோமா என்று சமீபத்தில் எங்களிடம் கேட்கப்பட்டது.

எங்கள் கைகளில் இரத்தம் இல்லை. தவறில்லை. நம்மைப் பற்றி வேறுவிதமான புரிதல் இருக்கலாம். தவறான கருத்து இருக்கலாம், ஆனால் மக்கள் முன் வந்து வாக்கு கேட்கும் பலம் எங்களுக்கு உள்ளது.
நாம் அப்பாவிகள் என்பதாலும், நாம் உருவான அரசியல் சூழலாலும் அந்த சுயபலம் நமக்காக கட்டமைக்கப்பட்டது” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri