'ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் மக்கள் விரட்டியடிப்பார்கள்': ஸ்ரீநேசன்
"இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் மக்கள் விரட்டுவார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "இலங்கையை ஆண்ட - ஆளுகின்ற தலைவர்கள் நாட்டைச் சீர்குலைத்துள்ளார்கள். நாட்டை அவர்கள் சீர்படுத்தவில்லை.
மக்கள் போராடுவார்கள்
அவர்கள் இன்னும் நாட்டைச் சீர்குலைப்பார்களானால் மக்கள் நேரடியாகக் களத்தில் இறங்குவார்கள்; போராடுவார்கள்; நெருக்குவாரங்களைக் கொடுப்பார்கள்.
ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் மக்கள் விரட்டுவார்கள்.
இதைத் தற்போதைய தலைவர்கள் உணர்ந்து சுயநலத்தைக் களைந்து பொதுநலத்தின்
அடிப்படையில் செயற்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan