இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு : முற்றாக நீரில் மூழ்கிய பிரதேசம்
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் புத்தளம் மாவட்டத்தின் பழைய எலுவாங்குளம் பிரதேசம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
இதனால், பழைய எலுவாங்குளம் பிரதான வீதியிலிருந்து கலா ஓயா பாலம் வரை சுமார்
மூன்று கிலோமீற்றர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வீதியினூடான
போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, பழைய எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் அப்பகுதியிலுள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள்
அத்துடன், பழைய எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த 600 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |