காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்
காலநிலை மாற்றம் மற்றும் மழைவீழ்ச்சி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.
இதற்கமைய 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை மற்றும் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.
தற்காலிகமாக பலத்த காற்று

அதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை காலநிலையுடன் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri