மழை காரணமாக பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு பாதிப்பு: போட்டி ரத்து, புள்ளிகள் பகிர்வு
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற இருந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் சுப்பர் 8 சுற்றின் முக்கியப் போட்டி, தொடர்ச்சியான மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.
அதிகாரப்பூர்வ தொடக்க நேரத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என காத்திருந்த போட்டி அதிகாரிகள், இறுதியில் ஆட்டத்தை கைவிட தீர்மானித்தனர்.
நாணய சுழற்சி நடைபெற்ற சமயத்தில் தொடங்கிய மிதமான மழை பின்னர் அதிகரித்ததுடன், நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மைதானம் போட்டி நடாத்துவதற்கு உகந்ததாக இல்லாததால், நடுவர்கள் தவிர்க்க முடியாத முடிவை எடுத்தனர். நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கு முன்னதாகவே மழை பெய்யும் சாத்தியம் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முந்தைய தினமும் மழை காரணமாக பாகிஸ்தான் அணியின் மாலை பயிற்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.
சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளும் தலா ஓரு புள்ளிகள் என்ற அடிப்படையில் பெற்றுள்ளன.
பாகிஸ்தான் அணி அடுத்ததாக செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தை எதிர்கொள்ளும் நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு இலங்கையுடன் மோத உள்ளது.
நியூசிலாந்து அணி புதன்கிழமை இலங்கையையும், வெள்ளிக்கிழமை இங்கிலாந்தையும் எதிர்கொள்ள உள்ளது.
இந்தக் குழுவில் உள்ள அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இன்றைய போட்டியில் தலா ஓரு புள்ளி மட்டுமே கிடைக்கப் பெற்றது.
இது அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் சவால்களை ஏற்படுத்தலாம் என கிரிக்கட் வல்லுனர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri