தொடருந்து கட்டுப்பாட்டாளர்களின் திடீர் நடவடிக்கையால் கடும் சிரமத்திற்குள்ளான பயணிகள்
தொடருந்து கட்டுப்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தொடருந்து உப கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தனர்.
நேற்று மாலை 7 மணியளவில் மாளிகாவத்தை தொடருந்து நிலைய முற்றத்தில் பணிபுரியும் மற்றுமொரு ஊழியரால் தொடருந்து உப கட்டுப்பாட்டாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள்
அதற்கமைய, உடனடி நடவடிக்கையாக, அந்த பகுதியில் இருந்து ஓடும் தொடருந்துகளுக்கான பணியில் ஈடுபடாமல் இருக்க தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், இரவு அஞ்சல் தொடருந்து தாமதமாகியதுடன், பல தொடருந்து பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தொழிற்சங்க நடவடிக்கையை இரவு ஒன்பது மணியுடன் முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்தது. இயக்கப்பட வேண்டிய தொடருந்து தாமதமானது குறித்து தொடருந்து பயணிகள் கோபத்துடன் கருத்து வெளியிட்டிருந்தனர்.
தொடருந்துகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம், ஆனால் தொடருந்துகள் செல்லவில்லை. இந்த நாடு குறித்து மிகவும் வருத்தமாக இருக்கிறது.
அரசியல்வாதிகள்
உண்மையைச் சொல்வதானால், அரசியல்வாதிகள் முன்னேறிவிட்டார்கள். நாங்கள் அவதிப்படுகிறோம். மக்கள் கஷ்டப்பட தேவையில்லை, அதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். நாங்களும் உணவின்றி மணிக்கணக்கில் காத்திருக்கிறோம்.

இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் ஏழைகளைப் பற்றி சிந்திப்பதில்லை. நாம் செல்லும் வழியைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை என பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam