தமிழ் பிரதேசங்களில் ஆயுதங்களுடன் நடமாடிய தலிபான்கள்! அதிர்ச்சி தரும் புலனாய்வு நடவடிக்கை
இறுக்கமான இஸ்லாமிய சட்டங்கள் இலங்கையிலுள்ள சில கிராமங்களில் உள்ளது என்றால் அதனை எல்லோராலும் நம்ப முடியாது. ஆனால் சில நேரடி சாட்சியங்களை கேட்டபோது அதனை நம்பாமல் இருக்க முடியவில்லை.
முஸ்லிம் ஆயுதக்குழுவொன்றில் முன்னர் அங்கம் வகித்து பின்னர் ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வு பிரிவுடன் சேர்ந்து செயற்பட்டு தற்பொழுது அந்த செயற்பாடுகளிலிருந்து விலகி அரச சாட்சியாக மாறிய ஒருவர் செய்தியாளர்களுக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த ஆயுதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஷரியா கொலைகள் பற்றிய பல விபரங்களையும் அதற்கான ஆதாரங்களையும் தெரிவித்த அவர் மனங்களை கலங்கடிக்ககூடிய பல விடயங்களை தெரிவிக்கின்றார்.
கிழக்கில் செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் பற்றியும், அந்த குழுக்கள் புரிந்த படுகொலைகள் பற்றியும் முன்னர் அந்த குழுக்களுடன் சேர்ந்து இயங்கிய நபர்கள் வழங்குகின்ற சாட்சியங்கள் பற்றி விரிவாக ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...




