தொடருந்து பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
இன்று (12) முதல் 42 தொடருந்து பயணங்களை ரத்து செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக தொடருந்துகளை இயக்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் இன்று முதல் மறு அறிவித்தல் வரை 42 தொடருந்து பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்திருந்தது.
புதிய அறிவித்தல்

இதன்படி, பிரதான பாதையில் 20 தொடருந்து பயணங்களும், புத்தளம் பாதையில் 04 பயணங்களும், களனிவெளி பாதையில் 02 தொடருந்து பயணங்களும், கடலோர தொடருந்து பாதையில் 16 தொடருந்து பயணங்களும் ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவித்திருந்தது.
எனினும் இந்த தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் புதிய அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri